21 November 2008

அம்மா

மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!'

4 comments:

KARTHIK said...

அருமை ராஜ்

Unknown said...

// மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன் ................ //

அடேய் கரும்பார மண்டையா ... எங்கிருந்துடா காப்பி அடுச்ச............................

இதுக்கு ஒரு எரும வேற..... ச்சி!.... sorry அரும வேற.............

Anonymous said...

நல்லா இருக்குங்க கவிதை.

கலாட்டா அம்மணி said...
This comment has been removed by the author.