24 November 2008

தொடங்குமுன் முடிந்த காதல்

காலங்கள் கழிந்தன; காட்சிகள் மாறின

கரைந்துவிட்ட நினைவுகள், கனவாகிப்போன காதல்

காலையில் அலுவலுகம், மாலையில் வீடு

மருத்துப்போன மனம், மறந்துபோன மகிழ்ச்சி

உயிர்த்துடிப்பற்ற இதயம், செயற்கையாகிவிட்ட வாழ்க்கை

எல்லாம் போய்விட்டது, ஏதோ இருக்கிறேன்.

21 November 2008

அம்மா

மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!'

25 July 2008

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எங்கள் தங்கம் (?) மூலப்பாலய்த்து சிங்கம் (?) பெங்களூரு புயல்.மாப்பி பூபதிக்கு
இன்னைக்கு பிறந்த நாளுங்கோவ் வாழ்தரவ்ங்க வாழ்துங்கோ கும்முறவங்க கும்முங்கோ.

பையன் என்னாமா போஸ் குடுக்குரான்பாருங்க.
ராசா அங்க யாராவது சோறு போடுராங்கள !



கண்ணு எழத தலையெல்லாம் திங்க கூடாது சாமி.
(இதை அவிங்கம்மா சொல்லுறமாதிரி படிக்கவும்)


நீ எனத்ததின்னாலும் எங்களுக்காக சரக்கோட காத்துகிட்டு இருக்குறபாரு.
மாப்பி நீ எங்கயோ போயிட்டடா.

09 July 2008

அப்புளிகேசன்

பரமு கேட்டுக்கொண்டதர்கிணங்க அவர் புகைப்படம் மாட்டப்படுகிறது.



அப்புளிகேசன் போடுறவங்க போடலாம் சாமியோவ்

20 June 2008

திருமண அழைப்பிதழ்

நமது நண்பர் செல்வன். ச.மஹேந்திரன் அவர்களுக்கும் செல்வி. சு.ராஜேஸ்வரி அவர்களுக்கும் வருகிற 22.06.2008 அன்று திருமணம் நடைபெற உள்ளது. மணமக்கள் பல்லாண்டு வாழ எனது வாழ்த்துகள்.