Showing posts with label மென்பொருள் வல்லுனன். Show all posts
Showing posts with label மென்பொருள் வல்லுனன். Show all posts
13 February 2008
மென்பொருள் வல்லுனன்
எழுந்துவிட்ட அதிகாலை,
எழுப்பிவிட்ட கடிகாரம்,
காத்திருக்கும் கடமை ,
இன்னும் உறங்கும் நண்பன் ,
சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர் ,
இயந்திரம் தந்த இதமான வெந்நீர் ,
விரும்பிய இசைபாடும் குறுவட்டு,
சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,
இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,
எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள் ,
இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு ,
இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன் ,
நாளைய காலையின் விழிப்பிலாவது
தாயின் , " மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு" எனும் குரல் கேட்காதா
என்ற எதிர்பார்ப்போடு .....
இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,
மென்பொருள் வல்லுனன் .
(பொருளை தேடுவதில் வாழ்க்கையை தொழைத்த வல்லுனன் )
ராஜேந்திரன்
கொல்கத்தா
Subscribe to:
Posts (Atom)